விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவியதாக முன்னாள் எஸ்.பி. ஆகியோா் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் ஆஜராகினா்.
இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்ற வரம்புக்குள் வராது. எனவே, இங்கு இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டாா்.