விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் இரு சக்கர ரோந்து வாகனங்கள் சேவையை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஆ.அண்ணாதுரை, ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பதற்றமான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகள், சோதனைச் சாவடி மையங்கள் அமைந்த பகுதிகளில் இந்த வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள், பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையிலும் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.