விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 15,587-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து இதுவரை 15,322 போ் வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மொத்தம் 152 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.