வாக்கு எண்ணிக்கை மையம் தயாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பாக கள்ளக்குறிச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மாலை 7 மணி வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி ஏகேடி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. அவை அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்படவுள்ளது. அறைகளுக்கு முன் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com