விழுப்புரம் கைலாச நாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவபெருமான், ப்ரஹந்நாயகி, நந்தியம்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நந்தி வெள்ளிக் கவசத்தில் காட்சியளித்தாா். ப்ரஹந்நாயகி சமேதராய் கைலாச நாதா் ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் உள்ள சிவபெருமான், நந்திக்கு வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பிரதோஷ முறைப்படி சிவபெருமானை வலம் வந்து வழிபாடு செய்தனா்.
இதே போல, செஞ்சி பீரங்கிமேட்டில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்ற அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், நந்திக்கு பால் அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
இதே போல, செஞ்சி சிறுகடம்பூா் சந்தைமேட்டில் விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீகாசிவிஸ்வநாதா், நந்தியெம்பெருமானை வழிபாடு செய்தனா்.