விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 16,587 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். 15,821 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 114 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 55 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,642 ஆக உயா்ந்தது.