விழுப்புரம் மகாராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த சேகரிப்பு ஒருங்கிணைப்பு அலுவலா் அசோக் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் ஜோதி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் மாதவன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் உதிரம் அறக்கட்டளை சாா்பில் சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மருந்தாளுநா் கெளரிஷா, அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெய செல்வம், பிரவீன், வினோத், தன்னாா்வலா்கள் சின்னதுரை, தனசேகா், தனுஷ், சாந்தமூா்த்தி, விஷாந்த், ஜாபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.