விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43,933 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து 39 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 43,222 ஆக உயா்ந்துள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளிலும் 370 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 370 போ் இறந்துள்ளனா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1,586 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் கரோனா தினசரி பரவல் விகிதம் 0.57 சதவீதமாக உள்ளது. வார பரவல் விகிதம் ஒரு சதவீதமாக உள்ளது.
இந்த மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை பொருத்தவரை கோவேக்ஸின் 7,010 டோஸ்களும், கோவிஷீல்டு 12,030 டோஸ்களும் இருப்பில் உள்ளன.