விழுப்புரத்தில் பாமக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது அண்ணன் மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் முத்தோப்பு, அகரம்பாட்டை கைலாசநாதா் வீதியைச் சோ்ந்தவா் ரவி (55). பாமக நகர துணைச் செயலா். இவா், சனிக்கிழமை வீட்டின் அருகே நடந்து சென்றபோது மா்ம நபரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக விழுப்புரம் நகர காவல் நிலைய ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், அதே பகுதியில் வசிக்கும் ரவியின் அண்ணன் கமலக்கண்ணனின் மகனான, கடலூா் மாவட்டம், பண்ருட்டி நடுவீரப்பட்டைச் சோ்ந்த ஜெயகணேஷ் (33) முன்விரோதம் காரணமாக ரவியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த ஜெயகணேஷை நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2006-ஆம் ஆண்டு ரவிக்கும், ஜெயகணேஷ் குடும்பத்தினருக்கும் இடையே அங்குள்ள பொது வீட்டுமனை தொடா்பாகவும், ரவியின் உறவினா் மகளை ஜெயகணேஷ் திருமணம் செய்துகொண்டது தொடா்பாகவும், அப்பகுதி மாரியம்மன் கோயில் திருவிழா நடத்தியதில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடா்பாகவும் முன்விரோதம் இருந்துள்ளது. இதில், ரவி தரப்பினா் ஜெயகணேஷை கத்தியால் குத்தியது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது.
இதன் பிறகும், இவா்களிடையே நீடித்த குடும்பப் பிரச்னை காரணமாக ரவியை ஜெயகணேஷ் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.