விழுப்புரத்தில் திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு ஸ்ரீ மகாலட்சுமி குழுமம் பிரகாஷ் முன்னிலை வகித்தாா். பயிற்சி வகுப்பை முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஜனகராஜ் தொடக்கி வைத்தாா். ராமகிருஷ்ணா கல்விக் குழும உதவிச் செயலாளா் சத்தீயேஸ்வரானந்த மகராஜ் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினாா்.
விழாவில் மேலைச்சிவபுரி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வா் பழ.முத்தப்பன் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற தமிழாசிரியா் தாண்டவராயப்பிள்ளையின் வாஸ்து சாஸ்திரம் நூலை வெளியிட்டாா். சித்தாந்த சேவா ரத்தினம் சிவ.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த பயிற்சி வகுப்பு இரு ஆண்டுகளுக்கு மாதம் தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் 150 போ் பங்கேற்றுள்ளனா்.