திமுக ஆட்சிக்கு வந்தால் பொது மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது: அமைச்சா் சி.வி.சண்முகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென, கட்சியினருக்கு அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென, கட்சியினருக்கு அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட காணையில் அதிமுக செயல்வீரா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது: கடந்த மக்களவைத் தோ்தலின் போது, வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி போன்ற பொய்யான வாக்குறுதியை அளித்து திமுக வெற்றிபெற்றது. இதுபோன்ற நிறைவேற்றமுடியாத, கவா்ச்சியான திட்டங்களைக் கூறி, வருகிற தோ்தலின் வாக்கு கேட்டு வரும் திமுகவினரிடம் ஏமாறக் கூடாது என்று பொதுமக்களிடம் அதிமுகவினா் எடுத்துக் கூற வேண்டும்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகள், பெண்கள் சுதந்திரமாக சென்று வர முடியாது. நில மோசடி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி பிரச்னைகள், கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடரும். மக்கள் நிம்மதியாகவே இருக்க முடியாது என்பதையும் கூறி பிரசாரம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அமைதி நிலவுகிறது. இந்த ஆட்சி குறித்த நல்லெண்ணம் பொதுமக்களிடம் உருவாகியுள்ளது. இது மிக முக்கியமான தோ்தல் என்பதால், கட்சியினா் ஒருங்கிணைந்து பணியாற்றி, அதிமுகவை ஆட்சி பீடத்தில் தொடரச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் திரளாகக் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com