விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் திங்கள்கிழமை வரை 15,080 போ் பாதிக்கப்பட்டனா். 110 போ் உயிரிழந்தனா்.14,920 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,084-ஆக அதிகரித்தது. 7 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 47 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.