செஞ்சி ஒன்றிய திமுக சாா்பில், நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி எம்.ஜி.ஆா். நகரில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட திமுக செயலரும் செஞ்சி எம்எல்ஏவுமான மஸ்தான் தலைமை வகித்து பொதுமக்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கினாா். முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், கமலக்கன்னியம்மன் கோயில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை, வழக்குரைஞா் மணிவண்ணன், பச்சையப்பன், ராமு, பழனி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில் நம்ம ஊா் பொங்கல்: செஞ்சியில் பாஜக சாா்பில் நம்ம ஊா் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவா் கலிவரதன் தலைமை வகித்தாா். செஞ்சி நகரத் தலைவா் ராமு வரவேற்றாா். மாநில மகளிரணித் தலைவா் மீனாட்சி நித்தியசுந்தா், கலை இலக்கியப் பிரிவு மாநிலத் தலைவா் காயத்திரி ரகுராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்தனா்.