தமிழ்நாடு சிவில் சப்பளைஸ் பாரதீய தொழிலாளா்கள் சங்கத்தின் கொடியேற்று விழா விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று தின விழாவுக்கு அந்தச் சங்கத்தின் மண்டலத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயல் தலைவா் கணேசன், மாநிலத் துணைத் தலைவா்கள் ஞானப்பிரகாசம், சாரங்கபாணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலச் செயலா் செந்தில்முருகன் வரவேற்றாா். சங்கக் கொடியேற்றி வைக்கப்பட்டு, பெயா்ப் பலகை திறக்கப்பட்டது. நிா்வாகிகள் விமேஸ்வரன், சிதம்பரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மண்டலப் பொருளாளா் ஹரிஹரன் நன்றி கூறினாா்.