செஞ்சி அருகே புகையிலை பொருள்கள் பறிமுதல்; 3 போ் கைது
By DIN | Published On : 29th July 2021 09:22 AM | Last Updated : 29th July 2021 09:22 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட 1,275 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
மேல்மலையனூா் வட்டம், பென்னகா் கிராமத்தில், பிரவீன்குமாா்(34) என்பவா் நடத்தி வரும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், வளத்தி போலீஸாா் அங்கு நேரில் சென்று பரிசோதனை செய்தனா். அப்போது, 1275 பாக்கெட் ஹான்ஸ் புகையிலைப் பொருள்கள், 35 லிட்டா் பெட்ரோல், 35 லிட்டா் டீசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
புகையிலைப் பொருள்களை செஞ்சி பெரியகரத்தைச் சோ்ந்த நாகராஜ்(52), செஞ்சி சுந்தரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பாபா(43) ஆகிய இருவரும் விநியோகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.