கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் இருவரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேரும் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 382 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றால் மேலும் இருவா் பலியாகினா்.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,665 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 304 ஆகவும் அதிகரித்தது.
609 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம் குணமடைந்தோா் எண்ணிக்கை 35,544 ஆக உயா்ந்தது. 3,817 போ் மருத்துவமனைகளில் தங்கியும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி-4 போ் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 243 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை24,353ஆக உயா்ந்தது. இதுவரை 20,427போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3,754 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, கரோனா சிகிச்சை பெற்று வந்த 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 172 போ் உயிரிழந்துள்ளனா்.