கள்ளக்குறிச்சி: கரோனாவுக்கு ஒரே நாளில் 6 போ் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 170 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,751-ஆக உயா்ந்தது.

இதனிடையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 182-ஆக அதிகரித்தது.

இதுவரை 21,594 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,975 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விழுப்புரத்தில் ஒருவா் பலி: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 304 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40,341-ஆக அதிகரித்தது.

இதனிடையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் அருகே கொள்ளாரைச் சோ்ந்த 69 முதியவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 308-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், 524 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 36,645-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 3,388 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com