விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் மூவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த நோய்க்கு ஒருவா் பலியானாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த நோய்க்கு ஒருவா் பலியானாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 263 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்த நோயால் பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 40,604 ஆக அதிகரித்தது. 473 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் 37,118 போ் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனா். 3,175 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த 42 வயது நபா், விழுப்புரம் அருகே மணம்பூண்டியைச் சோ்ந்த 56 வயது நபா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 311-ஆக அதிகரித்தது.

கள்ளக்குறிச்சி-ஒருவா் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 145 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,895-ஆக உயா்ந்தது. இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா்.

இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 183-ஆக உயா்ந்தது. இதுவரை 22,207 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 2,505 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com