செஞ்சி அருகே ரூ.99,500 ஆயிரம் பறிமுதல்

செஞ்சி அருகே ரூ.99,500 ஆயிரம் பறிமுதல்

செஞ்சி: செஞ்சி-விழுப்புரம் சாலையில், ஒட்டம்பட்டு அருகே செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது, வேலூரிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற வாகனத்தில் செய்த சோதனையில், ரூ.99,500 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. வாகனத்தில் வந்த வேலூரைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரிடம் நடத்திய விசாரணையில், தனது மாமனாரின் மருத்துவ சிகிச்சை செலவுக்கு பணத்தை கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா். எனினும் உரிய ஆவணமில்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, செஞ்சி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com