செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வாகன சோதனையில் ரூ.1.51 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் அருகே தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த மேல்மலையனூா் உதவி செயற்பொறியாளா் குணசேகரன், காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்ட போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்து சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி ரூ.1.51 லட்சம் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியராஜை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆவணமின்றி எடுத்து வந்த பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.