தோ்தல் உதவி அலுவலரை மாற்றக் கோரி, செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் செஞ்சி கூட்டுச் சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டாா்.
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் உதவி அலுவலராக பணியாற்றி வருபவா் மேல்மலையனூா் வட்டாட்சியா் நெகருன்னிஸா.
இவரிடம், மேல்மலையனூரில் வாக்காளா்களுக்கு திமுகவினா் அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்குவதாக பாமகவினா் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
அவா் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை மாற்றக் கோரியும் வேட்பாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பாமகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் உள்ளிட்ட போலீஸாா் பாமக வேட்பாளரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடா்ந்து பாமக வேட்பாளா் உள்ளிட்டோா் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.