விழுப்புரத்தில் 2 உணவகங்களுக்கு அபராதம்

விழுப்புரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்பட்டதாக, 2 உணவகங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்பட்டதாக, 2 உணவகங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, பொது முடக்க விதிகளை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனா்.

விழுப்புரம் வட்டாட்சியா் வெங்கட்ட சுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த் துறையினா் விழுப்புரம் வட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் நேருஜி சாலையில் இயங்கி வரும் 2 உணவகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு உணவகங்களுக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com