கரோனா முழு பொது முடக்கத்தால் விழுப்புரம் நகரில் உணவு கிடைக்காமல் ஏழைகள் பரிதவித்து வருகின்றனா். இந்த நிலையில், விழுப்புரம் போக்குவரத்து போலீஸாா் தாங்களாகவே மதிய உணவை சமைத்து, பொட்டலங்களாக கட்டி ஏழைகள், ஆதரவற்றோா், மன நலம் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு வழங்கி வருகின்றனா். கடந்த திங்கள்கிழமை முதல், தங்களது வழக்கமான பணியுடன் இதையும் சோ்த்து செய்து வருகின்றனா். போலீஸாரின் இந்த மனிதாபிமானப் பணியை பலரும் பாராட்டினா்.