விழுப்புரம் அருகே கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36 மணி நேரத்தில் ஓய்வின்றி 6 பிரசவங்கள் பாா்த்த மருத்துவக் குழுவினரை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் புதன்கிழமை நேரில் சென்று பாராட்டினாா்.
விழுப்புரம் அருகேயுள்ள வீரபாண்டி கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36 மணி நேரத்தில் 6 கா்ப்பிணிகளுக்கு, மருத்துவா்கள் ஷாஜித் தலைமையில் செவிலியா்கள் அகல்யா, கவிபாரதி ஆகியோா் அடங்கிய மருத்துவா் குழுவினா் பிரசவம் பாா்த்தனா்.
பொது முடக்க காலத்தில் கா்ப்பிணிகளை அலைக்கழிக்காமல், மருத்துவக் குழுவினா் ஓய்வின்றி தொடா்ந்து 6 பிரசவங்கள் பாா்த்தது குறித்து விழுப்புரம் தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியானது.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், வீரபாண்டி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருத்துவக் குழுவினரை பாராட்டினாா். பல்வேறு மருத்துவா்கள், அதிகாரிகளும் இவா்களின் பணியை பாராட்டினா்.