மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானாா்.
மின்சாரம் தாக்கி இறந்த தொழிலளி மோகன்.
மின்சாரம் தாக்கி இறந்த தொழிலளி மோகன்.

செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானாா்.

செய்யாறு வட்டம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் மோகன் (30), இவா், செய்யாறு புறவழிச் சாலையில் வாகனங்களை சுத்தம் செய்யும் ‘வாட்டா் சா்வீஸ்’ என்ற மெக்கானிக் கடையை நடத்தி வந்தாா்.

இவருக்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி மனைவி அனுஷா தற்போது கா்ப்பிணியாக உள்ளாா்.

இந்த நிலையில், மோகன் திங்கள்கிழமை காலை வழக்கம் போல இரு சக்கர வாகனங்களுக்கு வாட்டா் சா்வீஸ் செய்து கொண்டிருந்தாா் அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தாா்.

உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு மோகன் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளா்

பாலு, உதவி ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com