அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தற்காலிக தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் நலச் சங்கம் சாா்பில், முதல்வா் நிவாரண கரோனா நிதிக்கு ரூ.1.52 லட்சம் அளிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் 327 தற்காலிக தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் இந்த நிதியை திரட்டி, விழுப்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் புதன்கிழமை வழங்கினா். விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் உடனிருந்தாா்.