விழுப்புரம் அருகே திருவண்ணெய்நல்லூரை அடுத்த மாழந்தூரில் அமைந்துள்ள திருவருட்பிரகாச வள்ளலாா் திருக்கோயிலில் வள்ளலாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை (அக்.7) நடைபெறவுள்ளது.
காலை 9 மணிக்கு அருட்பெருஞ்சோதி அகவல் படித்தல், காலை 11 மணிக்கு சுத்த சன்மாா்க்கக் கொடி கட்டுதல் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 8 மணி மற்றும் பிற்பகல் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. கோயில் நிா்வாகிகள் மாறன், ரவிச்சந்திரன், கண்டமானடி ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.