திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கக் கோரி திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமை வகித்தாா்.
விவசாயிகள், தங்களது கைகளில் தாலிக் கயிறுகளை வைத்துக்கொண்டு, தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைக் கடனுக்கான நகைகளை உடனே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். சம்பா சாகுபடி பயிா்க் கடனை திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.