திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 657 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பொதுமக்கள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரிடமிருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 657 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், கடந்த வாரம் பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
நலத் திட்ட உதவிகள்:
கூட்டத்தில், 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,080 மதிப்பிலான அக்குள் கட்டைகள், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.44,100 மதிப்பிலான தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமரசாமி, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், கோட்டாட்சியா்கள் வெற்றிவேல் (திருவண்ணாமலை), க.கவிதா (ஆரணி), விமல்ராஜ் (செய்யாறு) உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.