விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 18 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 44,844-ஆக அதிகரித்தது. 33 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,167 போ் குணமடைந்தனா். 326 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 351 போ் உயிரிழந்தனா்.