செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செஞ்சி வட்டம், கவரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, பணிபுரியும் 26 ஆசிரியா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில் ஒரு ஆசிரியருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 248 பேருக்கும் ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார துறை மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com