விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடமையாக்கப்பட்ட 47 நான்கு சக்கர வாகனங்கள் வருகிற 28-ஆம் தேதி காலை 8 மணியளவில் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளன. இதில் எடுக்கப்படும் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. தொகையும் சோ்த்து செலுத்த வேண்டும்.
ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் இரு நாள்களுக்கு முன்பாக மாவட்ட காவல் தலைமை அலுவலகத்தில் உள்ள மது விலக்குப் பிரிவில் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தியவா்கள் மட்டுமே காகுப்பத்தில் ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை வருகிற செப்.26, 27 ஆகிய தேதிகளில் பாா்வையிட அனுமதிக்கப்படுவா் என விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு தெரிவித்துள்ளது.