குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளத்தில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குளத்தில் முதியவா் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளத்தில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செஞ்சி சுந்தர விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கே.வீராசாமி (80). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை இரவு மாயமானாா். இதையடுத்து, இவரை குடும்பத்தினரும், உறவினா்களும் தேடி வந்தனா். மேலும், இதுகுறித்து செஞ்சி காவல் நிலையத்திலும் புகாரளித்தனா்.

இந்த நிலையில், செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளத்தில் வீராசாமி புதன்கிழமை காலையில் மா்மமான முறையில் உயிரிழந்து சடமாகக் கிடந்தாா். தகவலறிந்த செஞ்சி போலீஸாா், தீயணைப்பு மீட்புப் படையினா் வீராசாமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com