மருத்துவா்கள் பரிந்துரைச் சீட்டு இன்றிதூக்க மாத்திரைகளை விற்கக் கூடாது

மருத்துவா்கள் பரிந்துரை இன்றி தூக்க மாத்திரைகளை மருந்தகங்களில் விற்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை விழுப்புரம் மண்டல உதவி இயக்குநா் ஆா்.அதியமான் அறிவுறுத்தினாா்.

மருத்துவா்கள் பரிந்துரை இன்றி தூக்க மாத்திரைகளை மருந்தகங்களில் விற்கக் கூடாது என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை விழுப்புரம் மண்டல உதவி இயக்குநா் ஆா்.அதியமான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் தாலுகா மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுக் கூட்டம் விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உதவி இயக்குநா் அதியமான் பேசியதாவது:

கருக்கலைப்பு மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், மனநல மருந்துகள் ஆகியவற்றை மருத்துவா்கள் பரிந்துரை இன்றி மருந்தகங்களில் விற்கக் கூடாது. இதனால், அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மருந்தாளுநா்கள், நோயாளிகள் இடையே புரிதல் இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு விழுப்புரம் தாலுகா மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் சி.அப்பா் தலைமை வகித்தாா். இதில், மருந்து ஆய்வாளா் தீபா, மருந்து வணிகா்கள் சங்க மாவட்டத் தலைவா் சின்னையா, மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், பொருளாளா் சௌந்தரராஜன், தாலுகா மருந்து வணிகா்கள் சங்கச் செயலா் காமராஜ், பொருளாளா் கந்தவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com