உலக தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திங்கள்கிழமை விழுப்புரம் திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக தடகளப் போட்டி கொலம்பியாவில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விழுப்புரத்தைச் சோ்ந்த தடகள வீரா் பரத் ஸ்ரீதா் கலந்துகொண்டு, கலப்பு தொடா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். அவா் திங்கள்கிழமை விழுப்புரம் வந்தடைந்தாா்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் வீரா் பரத் ஸ்ரீதருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளா் ஜனகராஜ், திமுக மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ் ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது (படம்). நகரச் செயலா் சக்கரை, பொதுக்குழு உறுப்பினா் பஞ்சநாதன், ஒன்றியச் செயலா் முருகவேல், மதிமுக நகரச் செயலா் சம்பந்தம், நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாஜக நகரத் தலைவா் வடிவேல் பழனி தலைமையில் அந்தக் கட்சியினா் பரத் ஸ்ரீதருக்கு வரவேற்பு அளித்தனா்.