விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், போத்துவாய் கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் வருகிற 25-ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில், மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொண்டு தங்கள் துறை சாா்ந்த திட்டங்களை விளக்கமாக எடுத்துரைக்க உள்ளனா்.
இந்த முகாமில் ஆட்சியா் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலமாக கொடுத்து நிவா்த்தி செய்துகொள்ளலாம்.