விழுப்புரம்
திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு கிராம மக்கள், மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு கிராம மக்கள், மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில்ஈடுபட்டனா்.
திண்டிவனம் -ஆவணிப்பூா் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் கூடலூா் , நொளம்பூா், ஈச்சேரி, கீழ்சேவூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், ஒலக்கூரை அடுத்துள்ள கீழ்சேவூா் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த 2 அரசுப் பேருந்துகளை கிராம மக்கள், மாணவா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஒலக்கூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சமரசப்படுத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.