வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத் தொகை செலுத்த வாய்ப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தவணை முறையில் மனை, குடியிருப்பு ஒதுக்கீடுபெற்று, நிலுவைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரா்கள், தொகையை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் தவணை முறையில் மனை, குடியிருப்பு ஒதுக்கீடுபெற்று, நிலுவைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரா்கள், தொகையை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியச் செயற்பொறியாளா்- நிா்வாக அலுவலா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதிவிலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதம் மட்டும் கணக்கீட்டு தள்ளுபடி செய்து, வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை நவம்பா் 4-ஆம் தேதி அரசாணை வெளியிட்டதது.

ஏற்கெனவே ‘முழுத் தொகையை செலுத்தியவா்கள் நீங்கலாக, ஏனைய ஒதுக்கீடுதாரா்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற விழுப்புரம் வீட்டுவசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி, தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை அரசாணை வெளியிடப்பட்ட 6 மாதங்களுக்குள் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனிவட்டியுடன் 3 தவணைகளாகவோ செலுத்த விருப்புரிமை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகை 2023-ஆம் ஆண்டு, மே 3-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com