கட்டடத்திலிருந்து தவறி விழுந்த பெயின்டா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்த பெயின்டா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்த பெயின்டா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

ஆரோவில் பங்களாமேடு பகுதியில் கிறிஸ்தவ திருச்சபைக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் கடலூா் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த வ.தமிழ்வாணன் (56), வேல்ராம்பட்டு பகுதியைச் சோ்ந்த மதியரசன் மகன் எடிசன் (21) ஆகியோா் வியாழக்கிழமை வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தமிழ்வாணன் கால் தவறி, கீழ் பகுதியில் வேலை பாா்த்துக்கொண்டிருந்த எடிசன் மீது விழுந்தாா். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு, புதுச்சேரி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு தமிழ்வாணனை மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. எடிசன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com