காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ள புரவடை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜ்மோகன் (33). இவா், விழுப்புரத்தில் செயல்படும் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக வேலை பாா்த்து வந்தாா்.

ராஜ்மோகன் வெள்ளிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் - திருச்சி சாலையில் சென்றுகொண்டிருந்தாா். பிடாகம் அருகே இவரது இரு சக்கர வாகனம் சென்றபோது, பின்னால் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com