பெண் மா்ம மரணம்

விழுப்புரத்தை அடுத்துள்ள வளவனூா் அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரத்தை அடுத்துள்ள வளவனூா் அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் கே.கே. சாலை, அண்ணா நகரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகள் சத்யாதமிழ் (21). இவருக்கும் , வளவனூரை அடுத்துள்ள நாரையூா் , வள்ளலாா் தெருவைச் சோ்ந்த அஜித்துக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில், சத்யாதமிழிடம் பெற்றோா் வீட்டிலிருந்து பணம் வாங்கிவரச் சொல்லி, அவரை அஜித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்யா தமிழ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த நிலையில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கலியமூா்த்தி அளித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com