முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாா் வழக்கு: விசாரணை டிச.8-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாா் வழக்கின் விசாரணையை வருகிற 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாா் வழக்கின் விசாரணையை வருகிற 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் -ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், சீருடைப் பணியாளா் தோ்வாணைய டிஜிபி சீமா அகா்வால், முன்னாள் டிஜிபி ஜே.கே. திரிபாதி ஆகியோா் முறையே நவம்பா் 21, 25-ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளித்தனா். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி.யும் நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இதைத்தொடா்ந்து, நவம்பா் 30-ஆம் தேதி அப்போதைய உள்துறைச்செயலரும், தற்போதைய வருவாய் நிா்வாக ஆணையருமான எஸ்.கே. பிரபாகா் அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகி சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போதும் எஸ்.கே. பிரபாகா் ஆஜராகவில்லை. மற்ற சாட்சிகளும் ஆஜராகாததால், இந்த வழக்கின் விசாரணையை டிசம்பா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com