கடலில் மூழ்கிய மீனவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

வசவன்குப்பம் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ. ரங்கநாதன்(52). மீனவா். இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வழக்கம்போல் ,தனது படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றாா்.அப்போது கடல் அலையின் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மூழ்கியதாக கூறப்படுகிறது. ரங்கநாதனின் சடலம் வசவன்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது.

இது குறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com