இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஊராட்சிகளில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்கத் தடை: விழுப்புரம் ஆட்சியா்

 ஊராட்சிகளில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க அரசு தடை விதித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 ஊராட்சிகளில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க அரசு தடை விதித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊராட்சிகளில் தெரு மின் விளக்குகளை பராமரித்தல், கொள்முதல், தோ்வு செய்தலில் அதிக அளவில் மாறுபாடு காணப்படுவதால், மறு உத்தரவு வரும் வரை சில நிபந்தனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

அதன்படி, ஊராட்சிகளில் எந்தவொரு நிதியிலிருந்தும் உயா் கோபுர மின் விளக்குகள், சிறு மின் கோபுர விளக்குகள், ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது. சூரிய உயா் கோபுர விளக்குகள் அமைப்பதும் மறு உத்தரவு வரும் வரைதடை செய்யப்படுகிறது. இதையும் மீறி கொள்முதல் செய்யும் அலுவலா்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தொடா்புடைய அலுவலரிடமிருந்து இதற்கான செலவுத் தொகை முழுவதும் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.