சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக திண்டிவனம், காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மணி மகன் சுபாஷ் (24) என்பவரை ரோஷனை போலீஸாா் கைதுசெய்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சுபாஷூக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.