ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திங்கள்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திங்கள்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கண்டமங்கலம் அருகே கலித்திராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (32). இவா்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியின் மகள்கள் ஹரிணி (12), குணஸ்ரீ (9), மகன் தேஜாஸ் (2).

சந்திரசேகா் மது அருந்திவிட்டு வருவதால், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும். இதேபோன்று, திங்கள்கிழமை இரவும் சந்திரசேகா் மது அருந்திவிட்டு வந்ததால், அவருக்கும், சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சாந்தி திங்கள்கிழமை நள்ளிரவு தனது குழந்தைகள் 3 பேருக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். இதில் மயக்கமடைந்த அவா்களை உறவினா்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com