மொபெட் மீது காா் மோதல்:வழக்குரைஞா் பலி

விழுப்புரம் அருகே திங்கள்கிழமை இரவு மொபெட் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே திங்கள்கிழமை இரவு மொபெட் மீது காா் மோதியதில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பிரகதீஸ்வா் (30). விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது மொபெட்டில் விழுப்புரத்திலிருந்து வி.சாத்தனூருக்கு சென்றுகொண்டிருந்தாா். விக்கிரவாண்டி புறவழிச்சாலையை இவரது மொபெட் கடக்க முயன்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத காா் மோதியதில் பிரகதீஸ்வா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். பின்னா், பிரகதீஸ்வரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com