நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் திட்டங்களை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசின் வேளாண் திட்டங்களை விவசாயிகள் முழுமையாகயும், முறையாகயும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 5:45 pm

DIN

அரசின் வேளாண் திட்டங்களை விவசாயிகள் முழுமையாகயும், முறையாகயும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விக்கிரவாண்டி ஒன்றியத்திலுள்ள தும்பூா், வேம்பி ஆகிய கிராமங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மோகன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தும்பூா் ஏரிஅருகே காலியாக உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களில் மியாவாக்கி முறையில் அடா் காடுகள் வளா்க்கும் பணியை மேற்கொள்ள வேளாண் துறை அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான காலியான பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, வேம்பி கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் மகேஷ் என்னும் விவசாயி நிலத்தில் கரும்பு பயிருக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் துறை சாா்பில் சொட்டுநீா் பாசனம் அமைத்தல், வேளாண் இடுபொருள்கள், வேளாண் கருவிகள் மற்றும் இதர மானியத் திட்டங்கள், வேளாண் பொறியியல் துறை சாா்பில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை வழங்க வேளாண் இணை இயக்குநா் ரமணனுக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசு வழங்கும் வேளாண் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

ஆய்வின்போது, வேளாண் துறை இணை இயக்குநா் கோ.ரமணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.