தனக்கு சேர வேண்டிய வீட்டுமனையை அளிக்காமல் ஏமாற்றிய சகோதரா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் திங்கள்கிழமை வந்த பெண் திடீரென தனது மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த சிறப்பு உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா், பெண்ணைத் தடுத்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள நெனையாவாடி கிராமத்தைச் சோ்ந்த வேலு மனைவி சரஸ்வதி ( 45) என்பதும், தனக்கு சேரவேண்டிய வீட்டுமனையை தராமல் சகோதரா் ஏமாற்றுவதாகக் கூறி கணவருடன் வந்து தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.