மின்வாரிய ஊழியா் சந்தேக மரணம்

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியா் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினா்கள் காவல் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியா் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினா்கள் காவல் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

விழுப்புரம், சாலாமேடு, இந்திரா பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (49). மின்வாரிய ஊழியா். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். கடந்த 8-ஆம் தேதி வெங்கடேசன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் ஆவின் பால்பண்ணை அருகே முள்புதரில் ஆண் சடலம் அழுகிய நிலையில் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. விசாரணையில் அது வெங்கடேசனின் சடலம் எனத் தெரியவந்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், வெங்கடேசனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது அண்ணன் ரமேஷ் மற்றும் உறவினா்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதாவிடம் புகாா் மனு அளித்தனா். அதில் தெரிவித்துள்ளதாவது: வெங்கடேசனுக்கும், அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. வெங்கடேசனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே உடல்கூறாய்வை விடியோ பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com